Jump to content

ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வருமா? 


Recommended Posts

ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வருமா? 

Wordscape என்ற ஒரு online game உள்ளது. ஐந்தில் இருந்து 9 எழுத்துகள் வரைக்கும் குழப்பி போட்டு இருப்பார்கள். அவற்றில் இருந்து ஒளிந்து இருக்கும் ஆங்கில வார்த்தைகளை கண்டு பிடிக்க வேண்டும். anagram வகையான விளையாட்டு இது. கடந்த வருடம் பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிலையில் பொழுது போகாமல் விளையாடத் தொடங்கி அதனால் மிகவும் கவரப்பட்டு இன்று 10,193 ஆவது நிலையில் (level) விளையாடிக்கொண்டு இருக்கின்றேன். 

இந்த game இல் ஒரு கட்டத்தின் பின் எமக்கான 50 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம். நானும் சும்மா ஒரு குறூப்பை தொடங்கலாம் என 'BePositive' ஒன்றை தொடங்க. அதில் அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் ஆட்கள் இணைந்து 50 பேர் கொண்ட குழுவாக ஆகி, ஒவ்வொரு வார இறுதியிலும் இதைப் போல இருக்கும் 50 அணிகளுடன் விளையாடுவோம். அனேகமாக முதல் நான்கு இடங்களிற்கு ஒன்றையாவது தொடர்ந்து தக்க வைப்போம்.

ஆண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருமா எனக் கேட்டுவிட்டு online game ஒன்றை பற்றி எழுதுகின்றான் என நீங்கள் நினைக்கத் தொடங்கும் இந்த கட்டத்தில் அதைப் பற்றி சொல்ல தொடங்குகின்றேன்.

அந்த game இல் நன்கு விளையாடும் ஒரு இளைப்பாறிய பாடசாலை பிரதி அதிபர் இருக்கின்றார். பேரப் பிள்ளைகளையும் பார்த்த ஆண் அவர், தன்னால் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது என்று கூறினார். ஏன் என்று எல்லாரும் கேட்டதுக்கு கொஞ்சம் தயக்கத்துடன் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதாகவும், திங்கள் (போன் திங்கள்) கிழமை அறுவை சிகிச்சைக்குட்படப் போகின்றேன் என்றும் கூறினார். பின்னர் தொடர்ந்து உரையாடும் போது, மார்பகப் புற்றுனோய் பிரிவில் தான் தானும் இப்போது அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், முழுக்க முழுக்க பெண்கள் சூழ்ந்த அந்தப் பிரிவில் தான் மட்டுமே ஆண் என்றும் அதுவே தன்னை மிகவும் சங்கடப்படுத்துகின்றது என்றும் சொன்னார்.

குறூப்பில் இருக்கும் பலருக்கு இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதில் விளையாடும் இரண்டு தாதிகளுக்கு இது ஒரு சாதாரண தகவலாக அமைந்தது இருந்தது. ஆண்களுக்கு மார்பகப் புற்றுனோய் வரும் என்றும் இது ஒன்றும் அதிசயமான விடயம் அல்ல என்றும் சொன்னார்கள். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுனோய் மிகுந்த அக்கறையாக இருப்பது போன்று ஆண்கள் இருக்காவிடினும், அது வருதவற்கான சாத்தியங்கள் உள்ளது என்றும் கூறினர்.

உங்களில் எவராவது இது பற்றி அறிந்து உள்ளீர்களா? 

ஜஸ்ரின், நெடுக்கு போன்றோர் இது தொடர்பாக மேலும் விரிவாக எழுதினால் நல்லம்.

இது பற்றி மேலும் தகவல் வேண்டும் என்று கூகிள் ஆண்டவரிடம் கேட்க, அவரும் பல தகவல்களை அள்ளி வழங்கினார். 

அதில் ஒன்று, தமிழ் பிபிசியில் வந்தது.

ஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்: அறிகுறிகள் என்ன?

ஏனையவை:


'Many men are oblivious they can get breast cancer'

Breast Cancer in Men

பின் குறிப்பு:

அவருக்கு மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதி பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை கூடிய , மற்றும் வயோதிப ஆண்களுக்கு , பெண்கள் போல் மார்பகம் காணப்படும் ....அவர்களுக்கு மார்பக புற்று நோய் வரும் சாத்திய கூறுகள் உள்ளதாய் கேளிவிப்பட்டு உள்ளேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Breast Cancer in Men | CDC

ஆண் பெண் இருபாலாரிலும் மார்பகம் அடிப்படை கட்டமைப்பில் ஒத்திருந்தாலும்.. பெண்களில் அது ஓமோன் தூண்டலால் வளர்ச்சியும் பால் சுரப்பிகளின் பெருக்கமும் கொழுப்புப் படிம அளவு அதிகரிப்பும் நிகழ்கிறது. 

குறிப்பாக ஆண்.. பெண் மார்பகப் பகுதிகளில் காணப்படும் நிணநீர் முடிச்சு சார்ந்து புற்றுநோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் இது பரம்பரை அலகுகள் சார்ந்து அதிகம் தீர்மானிக்கப்படுவதால்.. மார்பகப் புற்றுநோய் தாக்கமுள்ள குடும்பப் பின்னணி உள்ள ஆண்களில் இதற்கான வாய்ப்பு அதிகம்.

Cancer Risk for Women Carrying BRCA Mutations - National Cancer Institute

மார்பகப் புற்றுநோய்க்கு காரணமான பரம்பரை அலகு மாறல் ஜீன்கள் (BRCA 1 மற்றும் 2 மாறல்கள்) மனிதனில் 13ம் 17 நிறமூர்த்தங்களில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிறமூர்த்தங்கள் பால் சார் 23ம் நிறமூர்த்தங்கள் அல்ல. இதனால்.. பரம்பரை ஊடாக ஆண்களுக்கும் இந்த ஜீன்கள் கடந்தப்பட முடியும்.

BRCA mutation - Wikipedia

 

Understanding Genetics

Understanding genes & mutations - Marie Keating Foundation

இதைத்தவிர வேறு பல காரணிகள் இணைத்தோ தனித்தோ மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தலாம். அதற்கான வாய்ப்பும் உண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் அது மாறல் ஜீனை காவுவோரை விட குறைந்த சதவீதத்தில் தான் தாக்குகிறது.

Breast Cancer Symptoms, Risk Factors, and Treatment

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, 

ஆண்களில் , பெண்கள் போல மார்பகப் புற்று நோய் வரலாம் - ஆனால் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இலக்கங்களில் சொன்னால்: அமெரிக்காவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்று நோய் வருகிறது, ஆனால் ஆண்களில் 833 பேர்களில் ஒருவருக்கு வருகிறது (ஆனால், ப்றொஸ்ரேற் எனப்படும் முன்னிற்கும் சுரப்பி, ஆண்களில் மட்டும் இருப்பது, இதில் ஏற்படும் புற்று நோய் 100 பேர்களில் 13 பேருக்கு ஏற்படுகிறது!) -எனவே, ஆண்களில் முன்னிற்கும் சுரப்பிப் புற்று நோயை ஒரு வயதுக்கு மேல் பரிசோதிப்பர் - பெண்களில் மார்பகப் புற்று நோயை முன்கூட்டியே அறிய சில பரிசோதனைகள் செய்வர். 

கவனிக்க வேண்டியது, ஆண்களில் மார்பகப் புற்று நோய் அரிதாக உருவானாலும், போதிய விழிப்புணர்வு, முன்கூட்டிய மருத்துவக் கவனிப்பின்மையால் நன்கு முற்றி , வேறு உடற்பகுதிகளுக்கும் பரவிய பின்னரே கண்டு பிடிக்கப் படுகிறது. இது தான் பிரச்சினையாக இருக்கிறது. 
முன்கூட்டியே அறிய என்ன செய்யலாம்? எங்கள் மார்பகப் பகுதியில், அல்லது கமக்கட்டின் கீழ் ஏதாவது வீக்கங்கள் (வலியோடு அல்லது வலி இல்லாமல்) தென்பட்டால் உடன் மருத்துவரை நாட வேண்டும். 

ஆண்களில் ஏற்படும் சில மார்பகப் புற்று நோய்களுக்குரிய ஜீன் மாற்றங்கள் பெற்றோரிடமிருந்து கடத்தப் படலாம். உதாரணமாக BRCA1/2 எனும் பெண்களின் மார்பகப் புற்று நோயை உருவாக்கும் ஜீன் மாற்றங்கள் ஆண்களில் மார்பகப் புற்று நோயை மட்டுமன்றி, கணையப் புற்று நோய், முன்னிற்கும் சுரப்பிப் புற்று நோய் என்பவற்றையும் அதிகரிக்கக் கூடும். இத்தகைய குடும்பத்தில் இருக்கும் புற்று நோய்கள் பற்றிய விபரங்களை உங்கள் குடும்ப மருத்துவர், வருடாந்த நலப் பரிசோதனை செய்யும் போது கேட்டு உங்களுக்கிருக்கும் ஆபத்துகளைப் பற்றி அறிவுறுத்துவர். எனவே, வருடாந்தம் இத்தகைய physical  இற்கு செல்ல வேண்டியது அவசியம். 

தற்போது, 23 & Me ஆகிய கம்பனிகள் செய்யும் பரம்பரையியல் பரிசோதனையில், BRCA போன்ற ஜீன்களில் இருக்கும் மாற்றங்களையும் பரிசோதித்து உங்களுக்கிருக்கக் கூடிய அதிகரித்த வாய்ப்புகளைக் கணிக்க உதவுவர்!  

மேலே  ரதி சொல்லியிருக்கும் விடயங்களும் ஓரளவு சரியானவை: அதிகரித்த உடற்பருமன் பல புற்று நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன - மார்பகப் புற்று நோய் அவற்றுள் ஒன்றாக பெண்களில் இருக்கிறது. ஆண்களில் உடற்பருமனின் விளைவு தெளிவாக தெரியவில்லை. 

பெண்களுக்கிருப்பதைப் போல ஆண்களுக்கு பெரிய மார்பகங்கள் உருவாவது சிலரில் சில ஓமோன் மாற்றங்களால் நடக்கலாம். இதை gynecomastia என்பர். இதனால் மார்பகப் புற்று நோய் ஆபத்து மிகவும் சிறிதளவு அதிகரிக்கலாம். ஆனால், gynecomastia என்பது ஆபத்தில்லாத தானாகவே மறைந்து  விடக் கூடிய ஒரு நிலை! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபன் பகிடிக்குச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன்😎. சிவப்புக் கட்சியின் பழமை வாதக் கொள்கைகளுக்காக அந்தக் கட்சியை ஆதரிப்பது வேறு (அப்படியொரு "பழமை வாத சிவப்புக் கட்சி" இப்போது இல்லை என்பது வேறு கதை!).  "ட்ரம்பை 2020 இற்குப் பின்னர் ஆதரித்து வாக்குப் போடுவது" என்பது சீரியசான பிரச்சினையிருக்கும் ஆட்களால் தான் முடியுமான காரியம். அதுவும், குடியேறிகளாக வந்தவர்கள் இப்போது ட்ரம்பிற்கு வாக்களித்து ஆதரிப்பது, குந்தியிருக்கிற மரத்தின் கிளையை வெட்டுவது போன்ற செயல். ஒஹையோவில் சட்ட பூர்வ குடியேறிகளாக வசிக்கும் ஹெயிற்றி மக்களைப் பற்றிய ட்ரம்ப் கூட்டத்தின் வெறுப்புப் பேச்சின் பின்னரும், ஏனைய நாட்டுக் குடியேறிகள் சிலர் ட்ரம்பை விரும்புகிறார்கள் - மிகவும் ஆச்சரியமான விடயம்!
    • "வரமாக வந்தவளே"     "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!"     "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........ 
    • ஆயுதம் ஏந்தி போராடி அழிவுகளைத்தான் கண்டோம். அரியத்தாருடைய சிந்தனை அன்று யாருக்கும் வராமல் போயிற்றே. அப்பொழுதே பொது வேட்பாளரை நிறுத்தி சிங்களத்தை அதிரவிட்டு சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லியிருக்கலாமே. காலம் கடந்து வந்து சங்கெடுத்து ஊதிக் கொண்டிருக்கிறோம்.
    • கொலை முயற்சியில் ஈடுபட்டவர் பற்றி பல புதிய தகவல்கள் கூறப்படுகின்றன. போகுற போக்கை பார்த்தால் இதன் பின்னால் உள்ளவர் செலன்ஸ்கியோ என்று முடியப்போகுதோ? ஆக மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வளர்த்த கடாய் மார்பில் பாய்ந்த கதைதானோ. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.